கவிதை - நம்பமுடியாத ஓவியங்கள் பிள்ளாய் நீ - கண்ணம்மா
"அ" எழுதினாய்
பிறகு "ஈ" வந்து
தொடர்ந்து கிறுக்கலில்
முடிந்தது மொழி
எழுத பழகுகிறாய்
எவ்வளவு அழகாய்
வீட்டு சுவற்றில்....!
ஐஸ்கிரீம் வேண்டுமா
என்றேன்
எனக்கு வேண்டாமென்றாய்
உனக்கு இல்லை என்றேன்
அருகில் வந்து
எப்போதும் வாடா போடா
என்பவள்
தலையை சாய்த்து
மெல்லிய சிரிப்புடன்
மாமா எனக்குதான் ஐஸ்கிரீம்
என்றாய்....
சிறகில்லா குட்டி
தேவதையடி நீ!
யூடியூப் செயலி
இயக்குகிறாய் அதன்
பெயர்கூட அறியாமல்
இரண்டு வயதில் எப்படி?
குத்துப் பாடை
ஒலிக்கவிட்டு
ஆனந்த கூத்தாடுகிறாய்
ஆஹா!
எவ்வளவு அழகு...
குழந்தைகளின்
அன்பு கோபம் மகிழ்ச்சி
முகபாவங்கள்
என அனைத்துமே
மனதில் பதித்து வைக்க
வேண்டிய
நம்பமுடியாத ஓவியங்கள்.