கவிதை - மறைந்து போனது - கண்ணம்மா
மனப்பாடமாய் இருந்த
தொலைபேசி எண்கள்...
சாதாரணமாய் போட்டு பழகிய கணக்குகள்....
வரிக்கு வரி நினைவில் நின்ற பாடல்கள்....
அண்ணன் தம்பி பிறந்த நாட்களில்
வாசலில் போடும் கலர் கோலங்கள்....
விளையாட வரும் பக்கது வீட்டு பிள்ளைகளுக்கு
சேர்த்து சமைக்கும் அம்மா...
ரோட்டில் விலையாடும் குட்டீஸ்சின்
ரகளையான ரசிக்க வைக்கும் சண்டைகள்...
பண்டிகை நாட்களில் வாங்கும் துணிமணிகள்
பக்கத்து வீட்டு பெண்களிடம் காட்டி மகிழ்வது...
எல்லாம் மறைந்து போயின
செல்போனால்;;;
பலவீமானது மூளை!!!
ஒரு சோபாவில் முடங்கியது பிள்ளைகள்!!!
வாட்ஸ்சப்பில் வாங்கிய பொருட்களின்
இமேஜ் சேர் செய்து அதர்கு கமன்ட்ஸ் கேட்பதில்
துளைந்து போயின நேரில் பார்த்து சிரித்து பேசி வாழ்ந்த அன்நியூன்யம்.
நினைத்து வருந்தும் உங்கள் தோழி