(Reading time: 2 - 3 minutes)

கவிதை - பைத்தியக்காரன் - கண்ணம்மா

உங்களைப் போல 

தான்....... 

ஒவ்வொரு நாளும் 

விடிகிறது..... 

வாழ்க்கை புதிதாய்..... 

 

நான் கொஞ்சம் 

விசித்திரமானவன்.... 

 

ஓடி ஓடி 

உழைக்கும் - நிலையும் 

எனக்கில்லை....... 

 

பிறரை புறந்தள்ளி 

வசைபாடும் - வாஞ்சையும் எனக்கில்லை........... 

 

உணவு உண்டால் 

களைப்பாறுவேன்...... 

உள்ளம் நொந்தால் 

எனக்குள்ளே.... 

இளைப்பாறுவேன்........ 

 

ஆதரவென்று 

யாரும் இல்லை........ 

அடுத்தவரை நம்பி 

நான் இல்லை........ 

 

உடை கொஞ்சம் 

அழுக்கு தான்......... 

அதை., 

உள்ளத்தில் 

எதிர்பாராதீர்கள் - கொஞ்சம் ; 

வெழுப்பு தான்......... 

 

கோபம் வந்தால் 

கத்துவேன்......... 

குழந்தை போல 

சுத்துவேன்.......... 

 

யாரையும் 

ஏமாற்றியதில்லை...... 

நேரத்திற்கு 

தகுந்தார்போல் உருமாறியதில்லை....... 

 

வாழ்க்கை 

எதுவென்று - தெரியாமல் 

ஓடும்.......... 

 

உங்களைவிட 

நின்று நிதானமாய்.... 

ரசிக்கும்... நான் - கொஞ்சம் 

தெளிவு தான்...... 

 

உங்களின் 

ஏளனமும் ; நையாண்டியும் ; 

நான் 

நிறைய ரசித்தது உண்டு........ 

 

உங்களின் 

பைத்தியக்கார 

சிந்தனையில்...... 

சற்று வேறுபட்ட 

" பகுத்தறிவாதி " நான்........ 

 

கைக்கொட்டி சிரிக்கும் 

உங்களைப் பார்த்தால்...... எனக்குள்....... 

பரிதாபமாக இருக்கிறது..... 

பாவம்.... 

" பைத்தியக்காரர்கள் " என்று..... 

 

" முடனின் பார்வையில்... 

கல்லும் சாமி " தான்......... 

 

உங்களின் பார்வையில் 

நான் " பைத்தியக்காரன் " தான்....... 

 

ஹா...ஹா..... 

 

நல்ல 

வேடிக்கையான உலகம் 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.