(Reading time: 1 minute)

மாலை வரும் மன்னவனுக்கு - தீபாஸ்

Wife 

சதியவளின் கண்கள் சடுதிக்கொருமுறை ,

சாத்தியிருந்த கதவின் மேல் சஞ்சரிக்கும் ,

அவள் தேடும் நேரம் வந்துவிட்டால் ,

அவனைக் கொஞ்சும் அவள் உதடுகள் ,

காலம் தாழ்த்தி காத்திருக்க வந்தால்,

காரணம் தெரிந்தும் கலங்கிடும் கண்கள் .,

அன்றாடம் நிகழும் இச்சந்திப்பு ,

அவளுக்கு வேண்டும் ஆயுள்வரை.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.