மாலை வரும் மன்னவனுக்கு - தீபாஸ்
சதியவளின் கண்கள் சடுதிக்கொருமுறை ,
சாத்தியிருந்த கதவின் மேல் சஞ்சரிக்கும் ,
அவள் தேடும் நேரம் வந்துவிட்டால் ,
அவனைக் கொஞ்சும் அவள் உதடுகள் ,
காலம் தாழ்த்தி காத்திருக்க வந்தால்,
காரணம் தெரிந்தும் கலங்கிடும் கண்கள் .,
அன்றாடம் நிகழும் இச்சந்திப்பு ,
அவளுக்கு வேண்டும் ஆயுள்வரை.
{kunena_discuss:779}