(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஏன் சூரியத்தந்தையே? - தீபாஸ்

sunshine

உயிர் சனிக்கும் தாயா? இல்லை

வறட்சியால் கொள்ளும் பேயா?

 

வெளிச்சத்தின் கருனைகடலா? இல்லை

வெயிலால் உயிரைவதைக்கும் கொடூரனா?

 

மழைக்கு உதவும் நண்பனா ? இல்லை

நீரைக் களவாடும் பகைவனா ?

 

உலகின் இரவும் பகலும் உன்னாலே!

உயிரின் வாழ்வும் சாவும் உன்னாலே! இதனால்

 

உலகின் அப்பனே, நீ எடுத்து உரைப்பது

உன்பிள்ளைக்கு நல்லதும் கேட்டதும் சேர்ந்தே

 

உருவானது உன் உலகப் பிள்ளை என்பதையா ?

உணர்ந்தும் பக்குவப்படாத நான்

 

உருகிதேடும் நல்லதைமட்டும்

உணரமுடியவில்லையே ஏன்?

 

உயிர்களில் இரண்டு பக்கத்தில்

உதிப்பது கெட்டதெனும் இரவு

 

உலகத்தில் நீளமாய் இப்பொழுது

உறைந்துவிட்ட மாயமென்ன?

 

உதிக்குமா ஒப்பில்லா ஒளி என்ற

உயிரின் தலைவன் ஏங்குகிறேன் நான்

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.