கவிதை - ஏன் சூரியத்தந்தையே? - தீபாஸ்
உயிர் சனிக்கும் தாயா? இல்லை
வறட்சியால் கொள்ளும் பேயா?
வெளிச்சத்தின் கருனைகடலா? இல்லை
வெயிலால் உயிரைவதைக்கும் கொடூரனா?
மழைக்கு உதவும் நண்பனா ? இல்லை
நீரைக் களவாடும் பகைவனா ?
உலகின் இரவும் பகலும் உன்னாலே!
உயிரின் வாழ்வும் சாவும் உன்னாலே! இதனால்
உலகின் அப்பனே, நீ எடுத்து உரைப்பது
உன்பிள்ளைக்கு நல்லதும் கேட்டதும் சேர்ந்தே
உருவானது உன் உலகப் பிள்ளை என்பதையா ?
உணர்ந்தும் பக்குவப்படாத நான்
உருகிதேடும் நல்லதைமட்டும்
உணரமுடியவில்லையே ஏன்?
உயிர்களில் இரண்டு பக்கத்தில்
உதிப்பது கெட்டதெனும் இரவு
உலகத்தில் நீளமாய் இப்பொழுது
உறைந்துவிட்ட மாயமென்ன?
உதிக்குமா ஒப்பில்லா ஒளி என்ற
உயிரின் தலைவன் ஏங்குகிறேன் நான்
{kunena_discuss:779}