கவிதை - விரும்பாமையும் அழகுதான் - தீபாஸ்
அழகாய் இருந்தாலும் - மனம்
அழகில்லாவிடில், அவ்வுயிர்
அழகென்று சொல்லமாட்டேன்.
கலராய் இருந்தாலும் -உடல்
கழுவாமல் அரிதாரம் பூசுபவனை,
கண்கொண்டு பார்க்கமாட்டேன்.
உண்மையாக இருந்தாலும் - பேசும்
உக்கிரத்தால், விளைவது தீதெனில்
உண்மையை உரைக்கமாட்டேன்.
பணமாக இருந்தாலும் - கிடைப்பது
பாவத்தின் சம்பளம் என்றால்,
பக்கத்தில் செல்லமாட்டேன்.
தலைவனாக் இருந்தாலும் அவன்,
தவறானவன் என்றாள் நான்
தடிகொண்டு விரட்டியடிப்பேன்.
செல்வந்தனாக இருந்தாலும் அவன்,
சேர்த்தவிதம் கெட்டவழி எனில்,
செலவுக்கு வாங்கமாட்டேன்.
{kunena_discuss:779}