கவிதை - தமிழ்குடியின் ஏக்கம் - தீபாஸ்
ஏனிந்த அவலம் என்நாட்டில்
ஏமாறவே பிறந்தார்களா என்மக்கள்
கொள்ளையடிப்பவனையும் ஏற்கிறான்
தனிமனித ஒழுக்கமற்றவனையும் ஏற்கிறான்
ஏற்றபின் புலம்பியும் பயனில்லை
எழுச்சியை காணவும் வழியில்லை
என்எதிர்கால சந்ததியின் வாழ்கையை
இருண்ட பக்கமாய் மாறுகிறதே!
இயலாமையுடன் வேடிக்கைபார்க்கும்
எளியவனாய் ஆனேன் நான்
உனக்கென்ன ஒதிங்கிப்போ என்றே
ஓயாமல் ஓதினர் என்பெற்றோர்
இன்று முதுகெலும்பில்லா புழுவாய்
நிமிர்ந்துநிற்க முடியாமல் தவிக்கிறேன்
சாக்கடையில் பல்கிபெருகி இன்று
நாற்றத்தையும் சகஜமென நினைகின்றேன்
கூவத்தையும் கங்கையின் தூய்மையாக்க
கூடுமா? ஏக்கத்துடன் கனவுகான்கிறேன்.
{kunena_discuss:779}