(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தமிழ்குடியின் ஏக்கம் - தீபாஸ்

Dream

ஏனிந்த அவலம் என்நாட்டில்

ஏமாறவே பிறந்தார்களா என்மக்கள்

கொள்ளையடிப்பவனையும் ஏற்கிறான்

தனிமனித ஒழுக்கமற்றவனையும் ஏற்கிறான்    

ஏற்றபின் புலம்பியும் பயனில்லை                                 

எழுச்சியை காணவும் வழியில்லை

என்எதிர்கால சந்ததியின் வாழ்கையை

இருண்ட பக்கமாய் மாறுகிறதே! 

இயலாமையுடன் வேடிக்கைபார்க்கும்

எளியவனாய் ஆனேன் நான்

உனக்கென்ன ஒதிங்கிப்போ என்றே

ஓயாமல் ஓதினர் என்பெற்றோர்

இன்று முதுகெலும்பில்லா புழுவாய்

நிமிர்ந்துநிற்க முடியாமல் தவிக்கிறேன்

சாக்கடையில் பல்கிபெருகி இன்று

நாற்றத்தையும் சகஜமென நினைகின்றேன்

கூவத்தையும் கங்கையின் தூய்மையாக்க

கூடுமா? ஏக்கத்துடன் கனவுகான்கிறேன்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.