(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மனைவி - தீபாஸ்

Husband Wife

கண்ணெனும் வாசலில் நுழைந்து

இதயவீட்டில் வசித்த மலரே

தொடாமலே உன்னால் நான்

கருவறையில் சுமந்த நம்

காதலெனும் குழந்தைக்கு

உயிர் கொடுக்க தேடினேன்

உன் தேகமெனும் அற்புதத்தை.

அந்நொடி மொத்த ஜென்மத்தின் 

இன்பம் அத்தனையும் நான்

எட்டிப்பிடித்த தினவு தோன்றியது

திரும்பத்திரும்ப எட்டிப்பிடிக்க

உன் கண்ணில்வழிந்த் காதல்

என்னை கட்டியிழுக்குதடி என்

காதலில் இன்பம் கலவியிலா?

கலவியில் இன்பம் காதலிலா?

முடிவு தெரிந்ததின்று எனக்கு

காதலில்லா தேடல் உயிர்களின்

கழிவரைபோல் அசுத்தமானது

காதலின் தேடல் கடவுளின்

கருவரைபோல் புனிதமானது

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.