கவிதை - இக்கரைக்கு அக்கரைப் பச்சை - தீபாஸ்
குழந்தைக்கு வளர்ந்தவனாகிவிட ஆசை,
வளர்ந்தவனுக்கோ தன்
குழந்தைபருவத்தின்மேல் ஏக்கம.
வறுமைக்கு பணக்காரனாகிவிட ஆசை
பணக்காரனுக்கோ தன்
வறுமையில்கிடைத்த தூக்கத்தின் மீது ஏக்கம் .
இளமைக்கு கல்யாணமாகிவிட ஆசை
கல்யாணமானவனுக்கோ தன்
இளமையின் துடிப்பின்மீது ஏக்கம் .
குளிருபவனுக்கு கதகதப்பாகிவிட ஆசை.
கதகதக்கும்போதோ தன்
அறையை குளிரூட்ட ஏக்கம்.
படித்தவனுக்கு அயல்நாட்டு பணம் கிடைக்க ஆசை
அயல்நாட்டிலிருப்பவனுக்கோ தன்
நாட்டின் சொந்தத்தை காண ஏக்கம்.
கிடைக்காததை அடைய ஆசையும்
இழந்ததன்மீது ஏக்கம் கொள்ளுபவனே
கலியுக தோல்வியாளன் .
மனதின் ஆசைகளை அடக்கவும்
ஏக்கம்தனை புளிக்குமென ஒதுக்குபவனே.
எக்காலத்திலும் வெற்றியாளன் .
{kunena_discuss:779}