கவிதை - உன்னுடனான என் வாழ்க்கை - 02 - அனிதா சங்கர்
உன்னுடனான என் வாழ்க்கை
வசந்தத்தின் வாயில் என்று
நினைத்திருந்தேன் ஆனால்
என்னை இலையுதிர் காலத்தின்
முற்றத்திற்கு அழைத்து சென்றாய்
கல்லுக்குள் தேரை போல் என்மேலான
காதல் உன்னுள் உள்ளது
கல்லுக்குள் ஈரம்போல் ஒருநாள்
அது உன்னை நனைக்கும்
இன்று நீர்பூத்த நெருப்பாய்
உன்னுள் இருக்கும் என்காதல்
தணலில் இருக்கும் நெருப்பாய்
உன் கண்களில் தெரியும்
அன்று உன் கண் பார்வை
வீச்சை தாங்க முடியாமல்
என் கண்ணின் இமைகுடைகள்
மூடிக்கொள்ளும் அதை பார்க்கும்
உன் கண்களின் சிறைக்குள்
காதலுடன் நான் சிறைப்பட்டிருப்பேன்
அன்று உன்னுடன் நான் வசந்தத்தின்
மழையில் நனைந்துக் கொண்டிருப்பேன்
{kunena_discuss:779}