கவிதை - பசி தீர்த்த தாயவள்! - ரேவதிசிவா
பப்புக்கடைய சொல்லித்தந்தவளுக்கே
பப்புக்கடைந்தாள் அவள்!
வராத பெயரையெல்லாம்
வழிமொழிந்தாள் சைகையில்!
ஊரிலுள்ள அனைவருக்கும்
ஊட்டினாள்!
ஆ காட்ட சொன்னவள்
இதழில் வைத்தாள்!
அன்பையும் மகிழ்ச்சியையும்
அன்னமாய்!
நண்டுடனும் நரியுடனும்
நகர்வலம் வந்த
வெற்று விரல்களின்
விசையிர்ப்பில்
சிக்கிக்கொண்டேன்!
தலை சாய்த்து கிளுக்கி சிரித்தவளின் புன்னகையில்
தீர்ந்தது!
மனதின் பசி!
{kunena_discuss:779}