கவிதை - கூட்டுப்புழுவாய் மாறிய பட்டாம்பூச்சிகள் - ரேவதிசிவா
பரந்த இடத்தில்
பறந்து திரிந்தவன் நான்!
விண்ணில் விளையாடவே
விரிக்கிறேன்!
இருகைக்குள் இருக்கும்
இச்சிறகினை...
பின்னின்று பிணைத்ததால்
பிதற்றியப்படி!
கட்டவிழ முடியாமல்
கண்ணிர் சிந்தின
தேகமெல்லாம்!
மருத்துவனையில்
மயக்க மருந்துடன் நான்!
காதில் விழுந்தது!
சிறுமியின் மீதான
சீர்கெட்ட செயல்!
விகிதப்பட்டியலின்
வரிசையில் சேர்ந்தது!
மீண்டும் கூட்டுப்பூழுவாய் மாறிய
மற்றொரு பட்டாம்பூச்சி!
{kunena_discuss:779}