கவிதை - வாழ்க்கையின் நிறைவு! - ரேவதிசிவா
குதூகலம் முகத்தில் பொங்க
குறுநகையை மறைத்தபடி
ஒரு சீண்டல்!
யாரோ யாரோ என்று கூறி
யாதுமாய் இருப்பவரிடம்
ஒரு கேலி!
நீ இப்படி அப்படி என்று உளறிவிட்டு
நீயின்றி நானில்லை என்றபடி
ஒரு பாசம்!
பிள்ளைகளின் பிள்ளைகளைப் பார்த்த பின்பும்
பொக்கைவாய் புன்சிரிப்பு பிள்ளைகளாய்
பாட்டி தாத்தா!
வாழ்க்கையின் நிறைவு அவர்களிடம்
வாழ நினைப்பவர்கள் அனைவரும்
கற்க வேண்டிய ஒரு பாடம்!
{kunena_discuss:779}