கவிதை - நீர்வீழ்ச்சியா? அல்லது நீரின் வீழ்ச்சியா? - ரேவதிசிவா
நீர்வீழ்ச்சியென்று நினைத்து
நின்று கொண்டிருந்தேன் அதனடியில்!
நீரும் வந்தது
நிறம் மாறி இருந்தது!
சுத்தம் செய்ய சென்ற நான்
அசுத்தமாகி வந்தேன்!
பெரியவரிடம் காரணம் கேட்க
புத்தியில்லா சிறுவனே!
சுத்தமானவற்றையே அசுத்தமாக்குபவர்கள்
அவர்கள்!
நீயோ!
சுத்தம் செய்யப்படும் படிகளின் அடியில் நின்றால்?
சொல்லவவும் வேண்டுமோ?
சுத்தம் செய்ய அவ்வளவு நீர் அவசியமா?
சிந்தனை எழுந்தது!
யாரிடமும் கேட்க மனமில்லை
உங்களைத்தவிர...
விடை சொல்லுங்கள் !
இப்படிக்கு,
எறும்பு .
( விடை எதுவாய் இருந்தாலும் கடிக்க மாட்டேன்)
{kunena_discuss:779}