கவிதை - இணைப் பிரியா ஒன்று! - ரேவதிசிவா
வந்தான் வாளோடு எனை நோக்கி
வீறு கொண்டு எழுந்தேன் வாளில்லாமல்!
அக்கம் பக்கம் தப்பிக்க மார்க்கமில்லாமல்
அச்சத்தத்தை அடியில் தள்ளிவிட்டு
ஆங்காரமாய் அவனைப் பார்க்க
மன்னவனின் கூரிய வாளின் நுனி
மார்போடு முத்தமிட்டு கொல்ல காத்திருக்க
அலறி விழுந்து எழுந்தேன்!
தெளிந்தேன்!
தவறி விழுந்த வரலாற்று புத்தகத்தைக் கண்டு...
{kunena_discuss:779}