கவிதை - வீடு புகுந்த கள்வனின் மிரட்டல்! - ரேவதிசிவா
அமைதியான நேரத்தில்
ஆர்ப்பாட்டமாய் திறந்த கதவால்
அங்குமிங்கும் நோக்கினேன்!
மாயமாய் போனானோ
மந்திரமாய் நுழைந்த கள்வனென்று
மட்டியாய் மனம் எண்ண...
கதவடைத்து நச்சுக் காற்றை சுவாசிப்பவளே!
கண்ணை திறந்து இனியேனும் நடப்பாயென்று
கடுமையாய் வீசி சென்றது காற்று...
{kunena_discuss:779}