(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வீடு புகுந்த கள்வனின் மிரட்டல்! - ரேவதிசிவா

Breeze

அமைதியான நேரத்தில்

ஆர்ப்பாட்டமாய் திறந்த கதவால்

அங்குமிங்கும் நோக்கினேன்!

மாயமாய் போனானோ

மந்திரமாய் நுழைந்த கள்வனென்று

மட்டியாய் மனம் எண்ண...

கதவடைத்து நச்சுக் காற்றை சுவாசிப்பவளே!

கண்ணை திறந்து இனியேனும் நடப்பாயென்று

கடுமையாய் வீசி சென்றது காற்று...

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.