கவிதை - உண்மையில் அறியாதவர் யார்? - ரேவதிசிவா
வெறுப்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லும்
இவ்வுலகில்−நீ மட்டும்
காரணமின்றி அனைவரையும் நேசிக்கிறாயே!
உன்னிடம் கற்க ஆயிரம் விஷயங்கள் இருக்கும்பொழுது
உன்னைப்போய் ஒன்றும் அறியாத குழந்தையென்கிறார்களே!
உண்மையில் ஒன்றும் அறியாதவர் யார்?
நீயா அல்லது அவர்களா?
{kunena_discuss:779}