கவிதை - ஒரு பூவின் மரணவோலை - ரேவதிசிவா
இன்றுதான் பிறந்தேன்
கண்திறந்துப் பார்த்தப்பொழுதுதான் தெரிந்தது
இவ்வுலகம் வண்ணமயமானதென்று...
என்னைச் சுற்றி பலபேர் என்னைப்போல்
புன்னகைத்து எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டோம்
திடீரென்று ஒரு அழுக்குரல் கேட்டது
சொல்லிக்கொண்டார்கள்...
புதிதாக ஒரு தொட்டில் குழந்தையென்று
அனைத்தும் பிடிக்கவில்லை இப்பொழுது
கண்மூடினேன்
இவ்வுலகை எப்பொழுதும் காண வேண்டாமென்று..
{kunena_discuss:779}