கவிதை - ஒன்றின் ஓலம்... - ரேவதிசிவா
உன்னை தேடினேன் எனக்காகவென்று
உன்னை பறித்தேன் அடுத்தவரிடமிருந்து
உன்னை புதைத்தேன் யாருக்கும் கிடைக்கவேண்டாமென்று...
உன் பெயரை ஜபித்துக்கொண்டே
கண்மூடினேன்
மறுப்பிறப்பிலும் காணவேண்டுமென்று....
ஐயோ!
அதனால் அலைகிறேன் காற்றில்
புதையலைக் காக்கும் பூதமாய்.....
{kunena_discuss:779}