(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கேளா கூக்குரல்கள்... - ரேவதிசிவா

Selfish Human

கேளுங்கள் ஐயா கேளுங்கள்!

இங்கு ஒரு உயிர் துடிக்கிறது...

காப்பாற்றுங்கள் பெரியோரே காப்பாற்றுங்கள்!

ஏன் சிலை போல் நிற்கிறீர்?

அட! நீங்கள் எங்கு போகிறீர்?

மன்னியுங்கள் ஐயா மன்னியுங்கள்!

நாங்கள் மறந்துவிட்டோம்...

நீங்கள்தான்

கண்ணிருந்தும் குருடராய்

காதிருந்தும் செவிடராய் இருப்பீர்களே!

உங்களுக்கு உங்கள் நலனில்தானே அக்கறை

உங்களிடம் பேசுவது வீணென்று  அறியாது

எங்கள் முட்டாள் இனம்

கரைகின்றன....

இரத்தம் தோய்ந்த மனிதனை

காப்பாற்றுவீரென்று!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.