கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 05 - முதல் முத்த மழை - ரேவதிசிவா
யாரோ யார் யாரோ
உற்றாரோ உயிரானவரோ
அன்பிலோ ஆசையிலோ
கன்னம் தொட்டொ
இதழ் கொண்டோ
முத்த மழையை பொழிய
சிலருக்கு சிணுங்கியபடி
சிலருக்கு சிரித்தபடி
என்று முகத்தில்
எண்ணற்ற கலவைகளை காட்டி
ஆட்டிவைத்தாய் அனைவரையும்
ஆள் அம்பு சேனை இன்றி...
கேட்டவருக்கெல்லாம் அன்று
ஆட்டம் காட்டிய நீ!
இன்று வள்ளலாய் மாறி
இன்னமுதை
இடைவிடாது பொழிய
உன் முதல் முத்த மழையில்
உள்ளவர் அனைவரும்
உவகையில் பொங்க
அத்தருணமும் மிக அழகியதன்றோ...
The above one is dedicated to all who enjoy this lovable rain.
{kunena_discuss:779}