(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 05 - முதல் முத்த மழை - ரேவதிசிவா

Baby

 

யாரோ யார் யாரோ

உற்றாரோ உயிரானவரோ

அன்பிலோ ஆசையிலோ

கன்னம் தொட்டொ

இதழ் கொண்டோ

முத்த மழையை பொழிய

சிலருக்கு சிணுங்கியபடி

சிலருக்கு சிரித்தபடி

என்று முகத்தில்

எண்ணற்ற கலவைகளை காட்டி

ஆட்டிவைத்தாய் அனைவரையும்

ஆள் அம்பு சேனை இன்றி...

கேட்டவருக்கெல்லாம் அன்று

ஆட்டம் காட்டிய நீ!

இன்று வள்ளலாய் மாறி

இன்னமுதை

இடைவிடாது பொழிய

உன் முதல் முத்த மழையில்

உள்ளவர் அனைவரும்

உவகையில் பொங்க

அத்தருணமும் மிக அழகியதன்றோ...

The above one is dedicated to all who enjoy this lovable rain.

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.