கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 04 - முதல் அழைப்பு - ரேவதிசிவா
கண்ணின் மொழியிலும்
கையின் மொழியிலும்
பொருளில்லா
பெரும்பொருள் கொண்ட சொல்லிலும்
பலவாறாய் அழைத்த பசுந்தளிரின்
பிள்ளை மொழியில் இன்புற்றவர்கள்
பக்குவமாய் தங்களை
உறவின் பெயரில்
அழைக்க சொல்லி
கொஞ்சி கெஞ்ச...
போனால் போகட்டுமென்று
பெருமனதுடையவர் போல்
இதழ் பிரித்து
இதமாய்
கிள்ளை மொழியில்-நீ
கோர்த்த வார்த்தையை
கொஞ்சமாய் குரலெழுப்பி
அவர்களை உரிமையாக அழைக்க
அந்த அழைப்பின் சுகத்தில்
அனைவரும் திளைக்க
அத்தருணமும் மிக அழகியதன்றோ!
The above poem is dedicated to all children and their family members.
{kunena_discuss:779}