கவிதை - வலி நிவாரணி - ரேவதிசிவா
பல நோய்களுக்கு
பலவகை நிவாரணி இருக்க
சத்தமில்லா தழுவலில்
சுத்தமாய் வலிகள் போயின...
ஆம்!
மனதின் தவிப்புகளை-தன்
மெல்லிய தீண்டலால்
மறக்க செய்தது
மரத்திலிருந்து வந்த
மாசற்ற காற்று
அனைத்தும் நீங்குமென்ற
அறைக்கூவலின் மூலமாய்...
{kunena_discuss:779}