கவிதை - எப்போது உணர்ந்தேனடா? - அனு செல்வி
எப்போது உணர்ந்தேனடா?..
உன் கைவிரல் பிடித்து அக்னிவலம் வருகையிலா??
நீ என் கால் விரல் பிடித்து மெட்டி அணியயிலா??
நீ இட்ட மாங்கல்யம் என் நெஞ்சில் இரகசியம் கூறியதோ?...
அத்தருணம் உணர்ந்தேனோ??..
என் காதல் உனக்காக மட்டுமே என்று....
என்னவன் நீ என்பதால்
இவ்வளவு நாள் வராத காதல் உடனே வந்நதோ???..
காய்ச்சல் இருமல் தும்மல் போன்ற
உணர்வுகளைப் போல்
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம்
தோன்றும் ஒருவித மயக்க உணர்வுக்கு
பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன்....
கிடைத்தபாடில்லை; நீயே சொல்லிவிடு??
இதுதான் மஞ்சள் கயிறு மேஜிக்கோ??...
உன் சிறுவயது நிழற்படங்கள்
என்னை சிலிர்க்க வைக்குதடா!..
எத்தனை நாள் இரவின்
உறக்கம் தொலைத்த கனவு;
உன்னை எல்லாத் திசைகளிலும் தட்டி
சிறியதாக்கி உன் ஸ்பரிசம் பெற வேண்டுமென்று!...
இதோ....
என் வயிற்றில் எட்டி உதைக்கும்
இந்த குட்டி ஸ்பரிசம்...
உன் கண்களுடன் பிறந்தால்
இன்னுமொரு பெண் என்னைப் போல் பித்தாவாள்...
{kunena_discuss:779}