கவிதை - காத்திருப்பது கூட சுகம்தான்... - அனு செல்வி
என் கற்பனைக் காதல் கவிதைகளின்
கடவுச்சொல் நீ!...
உன்னை எண்ணி எண்ணி
கவிதை எழுதுவதாலோ என்னவோ
என் கவிதைகளும் உன்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டன.....
உன் பெயர் எழுத சொல்லிக் கெஞ்சுகின்றன....
எனக்குத் தெரிந்தாலல்லவா??..
நான் சிந்திப்பதெல்லாம்
உன்னை சந்திப்பதற்காகத்தான்....
உன்னை சுமக்காத இதயம் கூட
உடலுக்கு சுமையாகத் தான் இருக்கும்...
உன் நினைவுகளால் இயக்குகிறாய் எனை!...
கவிதைகளால் இயங்குகிறேன் நான்!....
காத்திருப்பது கூட சுகம்தான்....
என்னவன் நீ என்பதால்....
{kunena_discuss:779}