கவிதை - காதலின் அர்த்தம் இன்னும் புரியவில்லை - சமீரா
உன்னை காதல் கொண்டு பார்த்ததில்லை நான்
உன் காதலை ஏற்கும் வரை...
உன் அன்பை எனக்கு மட்டும் எதிர்பார்க்கவில்லை
உரிமையாய் நீ வரும் வரை...
ஒவியம் தீட்டுவதற்காய் உண்டான சிறு ஊடல்
காதல் காவியமாய் உருவாகிய விழித் தேடல்
உன் காதலை அழகாய் உறைந்தாய் என்னிடம்
வேண்டாம் என்றே முதலில் மறுத்தேன் உன்னிடம்
உன்னை விட என்னை ஆழமாய் நேசித்தாய்
என்னையும் உன்னை உயிராய் சுவாசிக்க செய்தாய்
உயிர் பிரியும் தருணம் வரை உன்னுjடன் என்றாய்
உணர்விழந்து நிற்கிறேன் எங்கே சென்றாய்
உனக்காய் காத்திருக்கிறேன் இன்னும் அர்த்தம் புரியாத
காதலோடு...!
{kunena_discuss:779}