கவிதை - காதல் எனும்...! - சமீரா
ஈரைந்து மாதம் உன்னை சுமந்து
அன்பாய் அரவனைத்து
நீ நலமாய் மண்ணில் வாழ
நெஞ்சில் சுமந்த தாயும்...!
உயர்வாய் வாழ பண்பையும்
பணிவையும் கற்பித்து
உன் தேவைகளை தயங்காமல்
தாராளமாய் செய்த தந்தையும்...!
அவர்களின் தள்ளாடும் வயதில்
உன் தயவை எதிர்பார்க்கையில்
தனிமையை துணையாக்கி
முடியாத முதுமையில்
முதியோர் இல்லத்தில்
நீ தடுமாறவைத்து விடுகிறாய்...!
பெற்ற பிள்ளையின் புறக்கணிப்பு
அவர்களின் முதுமையிலும் கொடுமை...!
{kunena_discuss:779}