கவிதை - கல்லூரியின் நினைவுகள்...!! - ரேவதி R
அள்ள அள்ள குறையாத...
அட்சயப் பாத்திரம்...!
என் கல்லூரியின் நினைவுகள்...!!
நினைக்க நினைக்க தெவிட்டாத...
ஆனந்தம்...!
என் நட்பின் நினைவுகள்...!!
ஒன்றா இரண்டா...
என் தோழிகளின் ஞாபகங்கள்..
ஆயிரம் ஆயிரம் ஆயிற்றே...!
அவற்றை இதற்குள்..
அடக்க முடியுமோ..!!
என் துயரம் போக்கும் வேளையில்...
என் தாய் ஆனாள்...!!
என்னிடம் குறும்புகள் செய்து...
என் சகோதரி ஆனாள்...!!
என்னை நட்பில் மூழ்கடித்து...
என் ஆருயிர் தோழி ஆனாள்...!!
எனக்கு கற்பிக்கும் வேளையில்...
என் ஆசான் ஆனாள்...!!
என் தவறுகளை சுட்டிக்காட்டி...
என் வழிகாட்டி ஆனாள்...!!
என் வீட்டு விஷேசங்களில்....
என் உறவினர் ஆனாள்...!!
எனக்கு உணவுட்டி என்...
தாய் ஆனவள்...!
நான் உணவுட்டி மகிழ..
என் சேயும் ஆகிப்போனாள்...!!!
தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பது...
மட்டும் நட்பல்ல...!
தடம் மாறாமல் காப்பதும்...
நட்பே ஆகும்..!!
அத்தகைய நட்பை எனக்களித்த....
என் ஆருயிர் தோழிகளுக்கு...
சமர்ப்பணம்.....!!!!
{kunena_discuss:779}