கவிதை - வருவாயா.....??? - சசிகலா
என் உயிரற்ற வாழ்க்கைக்கு உயிர்ப்பை கொடுத்தாய்....
நான் ஏனோதானோ வென்றிருந்தபோது
எனக்கான கடமையை உனர்த்தினாய்....
நான் வழிதவறி
நின்றபோது எனக்கான
பாதையைக் காட்டி
அப்பாதையைக் கடக்க
கைகொடுத்தாய்....
எனக்கான காப்பாளனாய் நின்று
என்னை துயரிலிருந்து
காப்பாற்றினாய்....
நான் அழும்போது
எந்தன் அழுகையில்
பங்கெடுத்தாய்.....
நான் சிரிக்கும்போது
என் சிரிப்பில்
பங்கெடுத்தாய்....
நான் தடுமாறி
விழும்போது உன்
தோள் கொடுத்து
தூக்கினாய்....
நான் இருளில்
இருளில் இருக்கும்போது
ஒளியாய் நீ வந்தாய்....
நான் கோபத்தில் இருந்தாலும்....
சோகத்தில் இருந்தாலும்....
கொஞ்சி கொஞ்சி
தேற்றினாய்.....
உன் அன்பை உணராதபோது என்னுடனே இருந்த நீ...
உன் அன்பை உணர்ந்தபின் என்னை விட்டு விலகி என்னை வேதனையில் வாடவிடுவதேன்....??
உன் நினைவுகள் என் தனிமை கணத்தை போக்கினாலும் நீ தான் வேண்டுமென்று ஆர்ப்பரிக்கும் மனதை என்ன சொல்லி அடக்குவேன்....?
பிரிவு என்ற வார்த்தைக்கு இத்தனை வலி இருப்பது தெரிந்திருந்தால் அதை உச்சரிக்ககூட பழகியிருக்க மாட்டேனே....!
இமை திறந்ததில் இருந்து இமை மூடும்வரை தான் என்னை இம்சிக்கிறாய் என்றால் இமை மூடிய பின்னும் கனவில் வந்து ஏன் என் உறக்கத்தை திருடுகிறாய்....?
உன்னிடம் இருக்கும் என்னை திரும்ப கொடுப்பாயா....? இல்லை உன்னுடனே என்னை பத்திரபடுத்திக் கொள்வாயா....?
இதுவரை கண்ணில் ஆனந்த கண்ணீர்.... இனிமேல் துயரக் கண்ணீர்....
இரண்டிற்கும் காரணம் நீயே.... என் கண்ணீருக்கான காரணத்தைச் சொல்லி என் கண்களை திரும்ப தந்துவிட்டு போ......
என்றாவது நீ என்னுடையவனாய் என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்......
வருவாயா.....???
{kunena_discuss:779}