(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கீரைக்காரி..!! - வசுமதி

womansellingveg

கன்னங்கள் சுருங்கி

மயிர்கள் வெளுத்து

பொக்கைவாய் சிரிப்புடன்

கிழவி பெண் அவள்..

 

தூரங்கள் கடந்து

தலையில் கூடையுடன்

கால்கடுக்க கீரைவிற்கும்

விவசாய முதலாளி அவள்..

 

உச்சிவெயில் வேளையில்

வேப்பமர நிழலில்

கீரைவிற்கும் தந்தரிம்

அறியா வியாபாரி அவள்..

 

கார் கனவான்கள்

பேரம்பேச கேட்டவிலைக்கு

கேட்பதை வெள்ளந்தியாய்

அளித்து மகிழ்பவள் அவள்..

 

கூடை கனம்குறைய

மடி சில்லரையால் கனமேற

நிம்மதியாய் கிடைத்ததில்

மனம் நிறைவுபெரும் அவள்..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.