கவிதை - கீரைக்காரி..!! - வசுமதி
கன்னங்கள் சுருங்கி
மயிர்கள் வெளுத்து
பொக்கைவாய் சிரிப்புடன்
கிழவி பெண் அவள்..
தூரங்கள் கடந்து
தலையில் கூடையுடன்
கால்கடுக்க கீரைவிற்கும்
விவசாய முதலாளி அவள்..
உச்சிவெயில் வேளையில்
வேப்பமர நிழலில்
கீரைவிற்கும் தந்தரிம்
அறியா வியாபாரி அவள்..
கார் கனவான்கள்
பேரம்பேச கேட்டவிலைக்கு
கேட்பதை வெள்ளந்தியாய்
அளித்து மகிழ்பவள் அவள்..
கூடை கனம்குறைய
மடி சில்லரையால் கனமேற
நிம்மதியாய் கிடைத்ததில்
மனம் நிறைவுபெரும் அவள்..
{kunena_discuss:1143}