(Reading time: 1 minute)

கவிதை - பனித்துளி ஆசைகள் - மதி நிலா

pregnancy

பாலைவனத்தில் பனித்துளியாய்

வறுமையிலிருந்தவளுக்கு வரமாய்

உதித்தவள்(ன்) என் உதிரமோ..??

புன்னகையில் திளைக்கிறேன் நான்..

பூகம்பமாய் ஈர்க்கிறாய் நீ..

நொடிகள் எல்லாம் தித்திப்பாய்..

நிமிடங்கள் எல்லாம் பூரிப்பாய்..

காத்திருப்பு கூட சுகமாய்..

காணொளி கேட்க முதலாய்.. 

ஆரவாரமாய் வாரங்கள்..

ஆமையாய் மாதங்கள்..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.