கவிதை - வண்ணங்கள் பூசி.. வண்ணாத்திப் பூச்சி.. - மதி நிலா
கானகம் அதிலே
காரிருள் பொழுதிலே
வண்ணங்கள் பூசி
வண்ணாதிப் பூச்சி..
மகரந்தம் தேடி
மலருடன் கூடி
இரைதேட வந்து
இரையாகி போனாயோ..??
பசலைநோய் மங்கையை
படுத்தியெடுக்க நாயகனாய்
நங்கூரம் இசைத்து
நகர்வலம் வந்தவனே..
பட்டற்று நிற்கும்
பட்டுப்பூ இவளை
கொஞ்சிடத்தான் வஞ்சம்கொண்டு
கொலையனாய் வந்தாயோ..??
அழகியிவள் தேனிதழை
அனுமதியில்லாமல் பருகி
பருவமழையின் நனையவைத்து
பனியில் சிலிர்க்கவைத்ததேனடா..??
நிலையில்லாத நாயகனே
நில்லடா அங்கே..
என் வினாவிற்கு
என்னிதயமிசைப்பதை உரைக்காமல்
ஏமற்றமென்னும் பரிசை
ஏந்தவைத்துவிட்டுச் செல்வதேனடா..??
{kunena_discuss:1143}