(Reading time: 1 minute)

கவிதை - காத்திருப்புகள்...!!! - வசுமதி

Flower 

இசைந்தாடும் தென்றலே

உன்னவளான மலரை தீண்ட

காத்துக்கிடக்கின்றாயோ..??

சாய்ந்தாடும் மலரே...

உன்னை பருக துடிக்கும் சில்வண்டிற்காய்

காத்திருக்கின்றாயோ..??

சில் சில்லென்று சுற்றித்திரியும் சில்வண்டே

எச்சில் ஒழுக ருசிக்க தூண்டும்

உன் தேனிற்காய் விடியலுக்காய்

காத்திருக்கின்றாயோ..??

தித்திக்கும் தேனே

உன்னை சுவைக்க பறந்தோடி வரும்

உன்னவனுக்காய் காத்திருக்கிறாயோ..??

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.