கவிதை - தாகம்..!! - வசுமதி
விண்ணின் தாகம் கடலில் சேர்கின்றது..
மழையின் தாகம் மண்ணின் மண் வாசம்..
விதையின் தாகம் கனியில் கனிகின்றது..
சிற்பியின் தாகம் சிலையாய் வடிகின்றது..
தாயின் தாகம் மழலையின் எச்சில் முத்தம்..
கவிஞனின் தாகம் கவிதையில் தணிகிறது..
ரசிகனின் தாகம் என்றும் தீராதது...
{kunena_discuss:779}