கவிதை - எப்பொழுது உணர்வாய் நீ..?? - வசுமதி
தெரிந்தே நான்
பித்தானேன் உன்னால்..
என் மனம் அறிவாயோ நீ..??
தயங்காமல் என் அன்பை
உன்னிடம் காண்பிக்கின்றேன்..
புரிந்து கொள்வாயோ நீ..??
கனவில் உன்னை நான்
வெல்வதாய் உரைத்தாயே..
நான் வென்றது
உன் இதயத்தைதான்..
எப்பொழுது உணர்வாய் நீ..??
{kunena_discuss:779}