கவிதை - முதல் காதல்..!! - வசுமதி
என் விழி நயனங்களை
உன்னை விட்டு பிரித்தெடுக்க
முடியாமல் தடுமாறுகிறேன்
அன்னையவள் என்னை அழைத்தபோதும்...
உனை பருகிக்கொண்டிருப்பதை
கண்டு முதுகில் ஒன்று போட்டபொழுதும்
திரும்பி பார்க்காமல் என்னமா..??
எரிந்து விழுந்தேன் இடையில் வந்த
பெற்றவளை கண்டு..
என்னை விட அவன் முக்கியமா..??
அன்னையவள் முகத்தை தூக்கிவைத்தாள்..
அவன் என் கையில் சேர்ந்தால்
இவ்வுலகம் என் கையிலென்றேன்
என்னவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டு..
என் ஏக்க பார்வையை உணர்ந்து கொண்ட
என் தந்தை என்னவனின் இதய திறவுகோளை
என்கையில் தந்து போ என்பதுபோல் கண் காட்டினார்
என் அன்னையின் ஏசுகளை காதில் வாங்காதவராய்..
என்னவனின் அருகில் சென்ற நான்
அவன் சிகையை வருடிக் கொடுத்து
அவன் மடியில் அமர்ந்து திறவுகோளை
சொருகி - உதைத்தேன் ஒரு உதை..
உர்ரென்று உறுமியபடி சீறிப் பாய
தயாராய் இருந்தவனை தட்டிக் கொடுத்த நான்
பெற்றோரை நோக்கி தலையசைத்து
சீறிப்பாய்ந்தேன் ஊரைச் சுற்ற என் பல்ஸரில்...
{kunena_discuss:779}