கவிதை - தோல்வியோ..??..!! - வசுமதி
கனாவில் என்றென்றும்
அவனுடன் சஞ்சாரம் செய்து..
இலை தீண்டும் பனித்துளி
ஸ்பரிசம் பார்வையில் உணர்ந்து..
தலைவன் நீயென
நெஞ்சில் வடித்தேன்..
கனவுகளெல்லாம் நகலாகி
நெஞ்சில் வடுவாய் உறைய..
பனித்துளி பார்வைகளோ
பாலைவன கற்றாழையில் மறைய..
தலைவன் நீயல்ல
சத்தியம் அறைந்தது மனதை..
- நகல் காதல்
{kunena_discuss:1143}