கவிதை - கண்மணியே !! காதலியே !! - அமீசன்
எனை கைபிடித்த பைங்கிளியே
தேனமுதே !!
என் மனமென்ற மனைதனிலே
காலமெல்லாம் குடியிருக்கும்
கோமகளே !!
நீயென்னுடன் இருக்கையிலே
நானுணறாத உனதருமை
பலவற்றை...
இச்சிறுபிரிவு வெகுஅழகாய்
எனக்குணர்தி வருகிறதே
நானிரு(ற)க்கும் நாள்வறையில்
என்கரங்கோர்த்து நடந்துவர..
என்னருகில் எப்பொழுதும்
நீயருக்க வேண்டுமென
இறைவனிடம் வரம்கேட்டு
வருகின்றேன் அனுதினமும்
{kunena_discuss:779}