(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - கண் கண்ட கவிதைகள் - 05 - கோடிமுறை காதல் சொல்லும்!  - ஈஸ்வரி

KKK

படம் : ABCD 2

பாடல் : Sun Saathiya

 

காதல் என்று வந்து விட்டால்,

கள்ளத்தனங்கள் ஆயிரம் தான்!

நீயோ கள்வர்களின் தலைவன் !

 

உணர்வெனும் மண்ணில் குப்புற விழுந்தும்

மீசையில் காதல் ஒட்டவில்லை

என நடிக்கும் மாயவன் !

 

உடைந்திடுவேனோ!

உன் பொய்யான உஷ்ணத்தில் பொசுங்கிடுவேனோ?

தள்ளி தள்ளி நின்று கொண்டே

கண்ணியம் காக்க நினைப்பவனுக்கு புரிவதே இல்லை

என்னை உன்னிடம் சேர்ப்பதே

பிரிவுகள் தான் என!

 

நான் தூது விட்ட நிலவும்

என் பெருமூச்சுடன் கலந்த காற்றும்

உனக்கென மட்டுமே உண்டாகும்

என் பிரத்தியேக பொறாமைகளும்

என் காதலை உனக்கு சொல்லாமல் போயிருக்கலாம்!

 

ஆனால்,

என்னுடன் இணையவும் இயலாமல்

விலகவும் வழியில்லாமல்

இன்ப அவஸ்தையில் நீ உதிர்க்கும் மௌன புன்னகையும்

உன் பேச்சை கேளாமல் என் கன்னங்கள் உரசும் கைவிரல்களும்

கோடிமுறை காதல் சொல்லும் !

 

ஹாய் ப்ரண்ட்ஸ்.. மேலே குறிப்பிட்ட பாடலில் வெகு குறுகிய நொடிகளில் கதாநாயகனை கதாநாயகி புன்னகையுடன் ரசிக்கும் காட்சியை வைத்து எழுதிய கவிதை இது. அவள் கன்னங்களை அவன் தட்டி ஏதோ பாராட்ட நிறைவான புன்னகை அவள் முகத்தில்!

அது அவ்வளவு அழகாக இருக்கும்...எவ்வளவுன்னா,இப்போ எனக்காக அந்த பாட்டை பாருங்க புரியும் ;)

 

கண் கண்ட கவிதைகள் - 04

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.