கவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்
உயிர்த்தெழுந்து உன்னை காதல் செய்வேன் என்னவனே
உயிரோவியமாய்
மனதில் பதிந்த
உன்னை பிரியும்
நொடி வந்தாலும்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
என் உள்ளத்தில்
இருக்கும் உன்னைப்பற்றிய
நினைவுகளை உன்னிடம்
சொல்லும் தருணத்துக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
இந்த ஜென்மத்தில்
எனக்கு நீ
தந்த அழகான
நினைவுகளுக்காகவே
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
உனக்காக நான் எழுதிய
கவிதைகளை உன்
காலடியில் சமர்ப்பிக்கும்
நாள் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
இனிமை தரும்
உன்னை பற்றிய
அழகான கனவு
என் இரவில் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
என் இதய கூட்டுக்குள்
உன் நினைவுகளை
பத்திர படுத்தும்
தருணத்துக்காகவே
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
உனக்கு நிழலாக
வாழும் பொக்கிஷ
தருணம் என்
வாழ்வில் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
உன் புண்
பட்ட இதயத்துக்கு
ஆறுதலாக நான் இருக்கும் நொடிக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
என்னை அழகான
சிற்பமாக செதுக்கும்
உளியாக நீ
இருப்பாயானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
உன் உயிரையே
என் உயிராக
எண்ணி வாழும்
அழகான நிமிசங்களுக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
நீ வெளியிடும்
மூச்சுகாற்று என்னை
தொடும் தருணம்
வருமென்றால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
பாலைவனமாக இருந்த
என் வாழ்க்கையில்
நீர் வீழ்ச்சியாக
நீ வருவாயெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
நீ தரும்
காயங்களை கூட
சுகமாக சேமிக்கும்
நொடி வருமெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
மின்னல் கீற்று
போல என்
வாழ்க்கைக்கு ஒளியாக
நீ மாறினால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
என் தாகம்
தீர்க்கும் மழை
நீராக நீ
வரும் நொடிக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
ஆபத்தில் இருந்து
காக்கும் தெய்வமாக
என்னை காக்க
நீ வருவாயெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
உன் இதய
சிறையில் அடை
பட்டிருக்கும் சுகம்
கிடைத்தால் கூட
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
உன் ஒற்றை
வார்த்தையை அழகான
கவிதை என்று எண்ணி
வாழும் நொடிக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
அழகான ஓவியமாக என் மனதில் உன் பிம்பத்தை பதிக்கும் நிமிசங்களுக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
என் சோக
கண்ணீருக்கு நீ
காரணமாக இருந்தாலும்
உனக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
உன்னை காதல்
செய்வேன் என்னவனே!!!!
என்னவனுக்கான தேடல் தொடரும் .....
{kunena_discuss:779}