(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - 08. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் 

உன்னை காதல் செய்வேன் என்னவனே

Eyes

உன்னுடன் வாழும்

வாழ்க்கை கற்பனையாக

இருந்தால் கூட

ரசித்து ருசித்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

இருவரும் கை

கோர்த்து கதை

பேசிடும் தருணங்களுக்காக

காத்திருந்து காத்திருந்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உன்னை நினைவுகளை

கூட மறக்க

முடியாமல் வலியால்

தவித்து துடித்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

நமக்குள் நடக்கும்

காதல் சண்டைகளை

கல்வெட்டாய் என்

மனதில் பதித்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உன்னை பிரிய

நேரும் தருணத்தை

கற்பனை கூட

செய்ய முடியாமல்

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உன்னுடன் விவாதம்

புரியும் தருணத்தை

அழகிய நிலாக்காலமாய்

எண்ணி எண்ணி

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

நீண்டு கொண்டே

போகும் உன்

வார்த்தைகளையும் மௌனங்களையும்

ரசித்து ரசித்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

என்னை சிலிர்க்கும்

வைக்கும் உன்

விரல் தீண்டல்களை

எண்ணி எண்ணி

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

அழகான பார்வையால்

காதல் கணைகளை

என் இதயத்தில்

வீசும் உன்னை

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உன் இதழால்

இனிக்க இனிக்க

என்னை அழைத்த

நிமிடங்களை எண்ணி

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

எத்தனை ஆசையை

துறந்தாலும் உன்

காதலை துறக்க

முடியாமல் தவித்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

கூறிய விழிகளால்

மௌன மொழி

பேசும் உன்

வார்த்தைகளை சேகரித்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உன்னை தீண்டும்

அனைத்து வலிகளுக்கும்

வலி நீக்கி

மருந்தாய் இருந்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

மழைதுளியாய் சிதறும்

உன் வார்த்தைகளை

சிதறாமல் சேகரிக்கும்

சிப்பியாய் இருந்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உன் உணர்வோடு

மட்டும் அல்ல

உன் உயிரோடும்

கலந்து

உன்னை காதல் செய்வேன் என்னவனே!!!!

என்னவனுக்கான தேடல் தொடரும் .....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.