(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - 07. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் 

உயிர் உருக உன்னை காதல் செய்வேன் என்னவனே

Eyes

உன்னை பற்றிய

அழகான நினைவுகளை 

விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக 

என் இதயத்தில் 

பொதிந்து வைத்து 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே !!!!

 

நீ போகும் இடமெல்லாம்

உன்னை பின் தொடர்ந்து

உன் காலடி சுவடுகளை 

வேறு யாரும் 

தீண்டாமல்  காத்து 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

முதல் பார்வையிலே 

என்னை செயல் 

இழக்க வைத்த 

உன் இதயம் திருடி 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

வண்ண வண்ண  

உன் நினைவுகளை 

மாலையாக என் மனதில் 

சூடி கொண்டு 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

நீ கூறும் 

பொய்களை கூட 

அழகான கவிதை 

என்று எண்ணி 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

என்னை பற்றி 

மறந்து உன் 

நினைவையே கொண்டு 

காதலாக வாழ்ந்து 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

நீ செய்த 

பிழைகளை கூட 

அழகான காவியம் 

என்று எண்ணி மகிழ்ந்து 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உந்தன் அழகான 

ஒற்றை புன்னகையை 

கூட என் இதய 

பெட்டகத்தில் சேமித்து 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

நீ என்னை

கடுமையாக தண்டித்தால் 

கூட அதை 

எண்ணி மகிழ்ந்து 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

எனக்காக படைக்க 

பட்ட தேவதூதன்

நீ என்று 

உன்னை எண்ணி,

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

என்னை பார்த்து 

கண் சிமிட்டும் 

விண்மீன் என்று 

உன்னை எண்ணி 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

வர்ணஜாலம் காட்டும் 

அழகான  வண்ணத்து 

பூச்சி என்று 

உன்னை எண்ணி 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

என் மேனியை 

தீண்டி செல்லும் 

தென்றல் காற்று 

என்று உன்னை எண்ணி 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

ஆராய்ச்சிகள் பல 

செய்து என் இதயத்தில் 

உன்னை பூட்டி வைக்கும் 

முறை அறிந்து 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

 

உன் மீதுள்ள 

காதலை வெறும் 

வார்த்தையாய் அல்லாமல் 

வாழ்க்கையாய் எண்ணி 

உயிர் உருக 

காதல் செய்வேன் என்னவனே!!!!

என்னவனுக்கான தேடல் தொடரும் .....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.