கவிதை - வெண்ணிலா - சத்யா
பால்நிற மேனியாள்
பகலில் தோன்றாள்
தூரவானின் நின்றாலும்
விழிக்கருகே சிரிப்பாள்
தேய்ந்து வளர்பவள்
தேர்போல் நகர்பவள்
வானை வளம்வருபவள்
வடிவொளி யானவள்
ஒளியை திருடி
ஒளியுட்டும் இனியாள்
தொடுவானின் தோழி
விண்மீன்களின் தலைவி
வெண்மையின்றி வெளிபடும்
வெண்மையான வெண்ணிலா.
{kunena_discuss:779}