கவிதை - நானே அவள்... - அனுபாரதி
முல்லை பூ சிரிப்பினிலே
முன்னூறு கவி சொல்வாள்.
முக்கனியின் சுவைதனை
ஒருநொடி பேச்சில் உணர்திடுவாள்.
கண்களால் எனை வீழ்த்தி
எனை ஆளும் கலை அறிவாள்.
எனை ஆளும் தமிழினை போல்
உயிர்வரை இனித்திடுவாள்.
என் இனியவள் அவள்......
என்னில் வாழ்ந்தவள் அவள்..
என் தாய்மையை ஈன்றெடுத்த தெய்வமவள்....
நானே அவள்......
{kunena_discuss:779}