கவிதை - நானும் தமிழும் - அனுபாரதி
எங்கும் நீ எதிலும் நீ
எண்ணம் நீ என்னில் நீ
வண்ணம் நீ வாழ்வும் நீ
நித்தம் நீ நினைவில் நீ
கண்கள் நீ கனவில் நீ
மண்ணும் நீ மழையும் நீ
விண்ணும் நீ விந்தை நீ
இன்ப ஊற்றாய் ...
எழிலின் உருவாய்....
இசையின் வடிவாய்...
கவியின் வழியாய்...
என் உணர்வில் நிறைந்தாய்
என் உயிரில் கலந்தாய்
என் ஆசை தமிழே....
இன்ப சுவையே........
{kunena_discuss:779}