கவிதை - சுகமா? சுமையா? - அனுபாரதி
சுகமா? சுமையா?
மலராய் மலர்கிறாய்
மகிழ்ச்சி கொள்ள செய்கிறாய்
இதமாய் இனிக்கிறாய்
ஏங்கிடவும் செய்கிறாய்
துன்பம் தருகிறாய்
இன்பத்தையும் நிறைக்கிறாய்
காயங்கள் தருகிறாய்
மருந்திடவும் செய்கிறாய்
வலிகளை விதைக்கிறாய்
சுகமாய் வருடுகிறாய்
தென்றலாய் சில நேரம்
புயலாய் பல நேரம்
மாறுவேடம் தரிக்கிறாய்
தோள் கொடுப்பதில் தோழனாய்
வீழ்த்துவதில் எதிரியாய்
பல உருவில் இருக்கிறாய்
குழம்பிடவும் வைக்கிறாய்
தவறுகளை திருத்தி கொள்ள
தரமாட்டேன் வழிகள் என்கிறாய்
நிறைகளை நிரப்பிட விழைந்தால்
நிறுத்திக்கொள் வீண் கற்பனை என்கிறாய்
தேவையில்லை சென்று விடு என்றால்
மென்மையாய் நகைக்கிறாய்
நான் இன்றி நீ இல்லை என்று
நினைவே நீ சுகமா? சுமையா?
{kunena_discuss:779}