கவிதை - என் தோழி - நர்மதா சுப்ரமணியம்
நான் சோகக் கடலில்
நீந்தி கரை சேர்ந்தப் போதும்..
நான் கண்ணீரில்
தத்தளித்தத் போதும்...
நான் மகிழ்ச்சியில்
திளைத்திருந்தப் போதும்..
என் இரவிற்கு துணையாய்
என்னை அரவணைத்து
எனக்கு நம்மதியும்
அமைதியும் அளிக்கும் தோழி
என் தூக்கம்..
நான் விரும்பி
அழைக்காவிடினும்
அவளே வருவாள்
என் கண்ணீர் துடைக்க
என் சோகம் தீர்க்க
நான் எனை மறந்து தூங்க...
{kunena_discuss:779}