கவிதைத் தொடர் - 01. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்
திருமண வயதுடைய பெண்ணவள்..
தன் திருமணத்திற்காய் காத்திருக்கும் பெண்ணவள்...
பெற்றோர்கள் அவளின் இணையை தேடிக் கொண்டிருக்க,
திருமணம் பற்றிய அவளின் எதிர்பார்ப்புகள்,எண்ணங்கள்... அவள் மணக்கவிருக்கும் அவளவனை பற்றிய அவளின் கற்பனைகள்.......அவளின் கவிதைப் தொகுப்பே இந்த காத்திருக்கும் காரிகை....
என்னவனே
எனக்கே எனக்காய்
எனக்காக பிறந்து
எனக்காக வளர்ந்து
என்னை தேடிக் கொண்டிருக்கும்
என் இனியவனே
காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வருகைக்காக
விரைவில் கண்டுபிடிப்பாய்
என்கின்ற நம்பிக்கையில்
இப்படிக்கு
உன் வருங்கால மனைவி
{kunena_discuss:779}