கவிதைத் தொடர் - 02. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்
உன்னைப் போல் ஒருவன்
எனக்கானவனைப் பற்றி
யோசிக்கும் நேரங்களில்
உன்னைப் போல்
ஒருவனை தான்
எதிர்ப்பார்க்கிறது நெஞ்சம்....
உன்னைப் போல்
எவ்வித எதிர்பார்ப்புமின்றி
என் மீது அன்புச் செலுத்த...
உன்னைப் போல்
எனக்கு அரணாயிருந்து
என்னைக் காக்க...
உன்னைப் போல்
எனக்காய் மட்டுமே
என்னை நேசிக்க...
உன்னைப் போல்
என்றும் என் மேல்
வெறுப்புணர்வு
வராமலிருக்க....
உன்னைப் போல்
என்றும் என்னை
குழந்தையாய் பாவிக்க...
உன்னைப் போல்
என்றும் அழகானவளாய்
அவன் கண்ணுக்கும்
நான் தோன்ற...
அவனின் ஒரு செயலிலேனும்
உன்னை நான் உணர...
உன்னைப் போல் ஒருவனை
எனக்கானவனாய்
தேர்வு செய்வாயா
என் அன்பான அப்பா......
{kunena_discuss:779}