கவிதைத் தொடர் - 03. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்
காதல் மலரும் தருணம்
உன்னை பார்த்த நொடியில்
என் மனம் கவர்வாயோ??
உன் பேச்சால்
என்னை ஈர்ப்பாயோ??
உன் நல்லொழுக்கத்தால்
என் நன்மதிப்பை பெறுவாயோ??
உன் நேசத்தால்
என்னுள் உன் அன்பை
விதைப்பாயோ???
யோசிக்கின்றேன்
எவ்வாறு
என்னுள்
காதலை மலர
வைப்பாயென..
{kunena_discuss:779}